Thursday, November 18, 2021

மழை நேரத்தில் அதானை மாற்றிக் கூறுவது

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ


صَلُّوا فِي بُيُوتِكُمْ
மழை நேரத்தில் அதான் கூறுபவர்,
அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்... அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் "ஹய்ய அலஸ் ஸலாஹ்" (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், "ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்" அல்லது "அஸ்ஸலாத் ஃபிர்ரிஹால்" (உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்று கூறவேண்டும்

وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ، صَاحِبِ الزِّيَادِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ إِذَا قُلْتَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَلاَ تَقُلْ حَىَّ عَلَى الصَّلاَةِ قُلْ صَلُّوا فِي بُيُوتِكُمْ - قَالَ - فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا ذَاكَ فَقَالَ أَتَعْجَبُونَ مِنْ ذَا قَدْ فَعَلَ ذَا مَنْ هُوَ خَيْرٌ مِنِّي إِنَّ الْجُمُعَةَ عَزْمَةٌ وَإِنِّي كَرِهْتُ أَنْ أُحْرِجَكُمْ فَتَمْشُوا فِي الطِّينِ وَالدَّحْضِ ‏.‏

அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பாளரிடம், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்... அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் "ஹய்ய அலஸ் ஸலாஹ்" (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், "ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்" (உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்று கூறுவீராக!" என்றார்கள். இ(வ்வாறு அவர்கள் கூறிய)தை மக்கள் ஆட்சேபிப்பதைப் போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "இ(வ்வாறு நான் கூறிய)தைக் கேட்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? என்னை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இவ்வாறு தான் செய்தார்கள். ஜுமுஆ(த் தொழுகை) கட்டாயக் கடமையாகும் (அத்தொழுகைக்கு வாருங்கள் என்று கூறப்பட்டுவிட்டால் சிரமத்தோடு நீங்கள் வரவேண்டியதாகிவிடும்). நான் உங்களைச் சேற்றிலும் சகதியிலும் நடக்க விட்டு உங்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பவில்லை (எனவேதான், இல்லங்களிலேயே தொழச் சொன்னேன்)" என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி:616, 666 ,668, ஸஹீஹ் முஸ்லிம் 1244 https://www.rahmathpublications.com/muslim.php?start=1240)

வாயை மூடி தும்மவும், இருமவும்


بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

 ஸஹீஹுல் புகாரி பாடம் : 7 தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் ஒருவர் விரும்புவது இறைநம்பிக்கை யின் ஓர் அம்சம் ஆகும்.

13. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்பு வதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.
நாம் விரும்புதை பிறருக்கு விரும்முவது போல், நாம் விரும்மாதை பிறருக்கு விருப்பாததும் ஈமானின் பகுதியாகும். ஆம் நோயை யாரும் விரும்புவத்ல்லை. தும்மலும், இருமலும் கொராணா போண்று தொற்று வியாதி தான் என விஞ்யானம் கூறுகிறது. இருப்பினும் தும்மல், இருமல் வரும் ஒருவர் வயை மூடுவதில்லை என்பதும், அவருடைய நோயை பிறருக்கும் பறப்புகிறார் என்று என்னுகையில் வருத்தமாக உள்ளது.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَزِيرٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا عَطَسَ غَطَّى وَجْهَهُ بِيَدِهِ أَوْ بِثَوْبِهِ وَغَضَّ بِهَا صَوْتَهُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் தும்மும் போது தமது கையாலோ, அல்லது தம் கையிலுருக்கும் துணியாலோ தன் வாயில் வைத்துக் கொள்வார்கள். தமது குரலை தாழ்த்துக்கொள்வார்கள் (திர்மிதி:2666, அபுதாவூத்:5029)
சட்டம்:
தும்மும் போது தும்மும் சப்தத்தை குறைத்து அல்ஹம்துலில்லாஹ் என்ற சப்தத்தை உயர்தவேண்டும். அந்நேரம் மூக்கிலிருந்து அழுக்கு, கிருமிகள் வெளிவந்து பக்கத்திலிருப்பவர்களைத் துண்பத்துக்குள்ளாக்காமலிருக்க முகத்தை கையாலோ, துணியாலோ மூடிக்கொள்வது நல்ல பண்பாகும். வலப் புறமோ, இடப் புறமோ திரும்மக் கூடாது. அதனால் தும்மியவருக்கு உடலில் வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பக்கத்தில் பாதிக்க வாய்ப்புண்டு. (அல்ஹாஃபிழ் இப்னுல் அரபீ)

Tuesday, September 21, 2021

தமது குழந்தை இறந்தும் நன்மையை எதிர்பார்(த்துப் பொறுமை கா)ப்பவரின் சிறப்பு

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 

1. பருவ வயது அடையாத குழந்தை சுவனப் பூங்காவில் நபி இப்ராஹீம்(அலை) அவர்களிடன் இருக்கும். 


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: .... 

பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர். இதை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சிலர், "இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)" என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், "(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்" என்று பதிலளித்தார்கள்  (ஸஹீஹ் புகாரி 7047)


2. அவர்களின் பெற்றோர் காக்கும் பொருமைக்காக அவருக்கு சுவனத்தில் வீடு அமைக்கப்படும்

அபு மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவிக்கிறார்கள்:

ஒரு அடியானின் குழந்தை இறந்துவிட்டால், அல்லாஹ் தன் வானவர்களிடம், 

"என் அடியானின் குழந்தையைக் கைபற்றி விட்டீர்களா?" என்று கேட்பான். "ஆம் என்று அவர்கள் கூறுவார்கள். 

"என் அடியானின் இதையக் கனியை கைபற்றி விட்டீர்களா?" என்று கேட்பான். "ஆம்" என்பார்கள். 

"என் அடியான் என்ன கூறினான்" என்று கேட்பான். "உன்னை அவர் புகழ்ந்தார்". 'இஸ்திராஜ் (இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்) என்று கூறினார்" என்பார்கள். 

உட்னேயே அல்லாஹ், "சொர்கத்தில் என் அடியானுக்காக ஒரு வீட்டைக் கட்டுங்கள். அதற்கு "பைத்துல் ஹம்த்" (புகழுக்குரிய வீடு) என பெயரிடுங்கள்" என்பான்.

(திர்மிதி - 942 ஷைக் அல்பானி இதை ஹஸன் எனக் கூறுகிறார்கள் அல்-ஸில்ஸிலாஹ் அஸ்-ஸஹீஹாஹ் 1408)


3. "குழந்தைகள், சொர்க்கத்தின் நுண்ணுயிர்கள் ஆவர்.அக்குழந்தைகளில் ஒன்று தனது தந்தையை, அல்லது பெற்றோரைச் சந்திக்கும்போது அவரது ஆடையை, அல்லது அவரது கையைப் பிடித்துக்கொள்ளும். -(அபூஹஸ்ஸானே!) நான் உங்களுடைய இந்த ஆடையின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று- பிறகு தன்னையும் தன் பெற்றோரையும் அல்லாஹ் சொர்க்கத்திற்குள் நுழைவிக்கும்வரை விடாது; அல்லது விலகாது" என்று சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 5132)





குளிக்கும் முறை

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ குளிக்கும் முறை: 1.நிய்யத் (குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்) 2. முன் கைக...