Thursday, November 18, 2021

மழை நேரத்தில் அதானை மாற்றிக் கூறுவது

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ


صَلُّوا فِي بُيُوتِكُمْ
மழை நேரத்தில் அதான் கூறுபவர்,
அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்... அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் "ஹய்ய அலஸ் ஸலாஹ்" (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், "ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்" அல்லது "அஸ்ஸலாத் ஃபிர்ரிஹால்" (உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்று கூறவேண்டும்

وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ عَبْدِ الْحَمِيدِ، صَاحِبِ الزِّيَادِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ إِذَا قُلْتَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَلاَ تَقُلْ حَىَّ عَلَى الصَّلاَةِ قُلْ صَلُّوا فِي بُيُوتِكُمْ - قَالَ - فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا ذَاكَ فَقَالَ أَتَعْجَبُونَ مِنْ ذَا قَدْ فَعَلَ ذَا مَنْ هُوَ خَيْرٌ مِنِّي إِنَّ الْجُمُعَةَ عَزْمَةٌ وَإِنِّي كَرِهْتُ أَنْ أُحْرِجَكُمْ فَتَمْشُوا فِي الطِّينِ وَالدَّحْضِ ‏.‏

அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பாளரிடம், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்... அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் "ஹய்ய அலஸ் ஸலாஹ்" (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், "ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்" (உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்று கூறுவீராக!" என்றார்கள். இ(வ்வாறு அவர்கள் கூறிய)தை மக்கள் ஆட்சேபிப்பதைப் போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "இ(வ்வாறு நான் கூறிய)தைக் கேட்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? என்னை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இவ்வாறு தான் செய்தார்கள். ஜுமுஆ(த் தொழுகை) கட்டாயக் கடமையாகும் (அத்தொழுகைக்கு வாருங்கள் என்று கூறப்பட்டுவிட்டால் சிரமத்தோடு நீங்கள் வரவேண்டியதாகிவிடும்). நான் உங்களைச் சேற்றிலும் சகதியிலும் நடக்க விட்டு உங்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பவில்லை (எனவேதான், இல்லங்களிலேயே தொழச் சொன்னேன்)" என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி:616, 666 ,668, ஸஹீஹ் முஸ்லிம் 1244 https://www.rahmathpublications.com/muslim.php?start=1240)

வாயை மூடி தும்மவும், இருமவும்


بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

 ஸஹீஹுல் புகாரி பாடம் : 7 தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் ஒருவர் விரும்புவது இறைநம்பிக்கை யின் ஓர் அம்சம் ஆகும்.

13. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்பு வதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆகமாட்டார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள்.
நாம் விரும்புதை பிறருக்கு விரும்முவது போல், நாம் விரும்மாதை பிறருக்கு விருப்பாததும் ஈமானின் பகுதியாகும். ஆம் நோயை யாரும் விரும்புவத்ல்லை. தும்மலும், இருமலும் கொராணா போண்று தொற்று வியாதி தான் என விஞ்யானம் கூறுகிறது. இருப்பினும் தும்மல், இருமல் வரும் ஒருவர் வயை மூடுவதில்லை என்பதும், அவருடைய நோயை பிறருக்கும் பறப்புகிறார் என்று என்னுகையில் வருத்தமாக உள்ளது.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَزِيرٍ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا عَطَسَ غَطَّى وَجْهَهُ بِيَدِهِ أَوْ بِثَوْبِهِ وَغَضَّ بِهَا صَوْتَهُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் தும்மும் போது தமது கையாலோ, அல்லது தம் கையிலுருக்கும் துணியாலோ தன் வாயில் வைத்துக் கொள்வார்கள். தமது குரலை தாழ்த்துக்கொள்வார்கள் (திர்மிதி:2666, அபுதாவூத்:5029)
சட்டம்:
தும்மும் போது தும்மும் சப்தத்தை குறைத்து அல்ஹம்துலில்லாஹ் என்ற சப்தத்தை உயர்தவேண்டும். அந்நேரம் மூக்கிலிருந்து அழுக்கு, கிருமிகள் வெளிவந்து பக்கத்திலிருப்பவர்களைத் துண்பத்துக்குள்ளாக்காமலிருக்க முகத்தை கையாலோ, துணியாலோ மூடிக்கொள்வது நல்ல பண்பாகும். வலப் புறமோ, இடப் புறமோ திரும்மக் கூடாது. அதனால் தும்மியவருக்கு உடலில் வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. பக்கத்தில் பாதிக்க வாய்ப்புண்டு. (அல்ஹாஃபிழ் இப்னுல் அரபீ)

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...