அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
கப்ருகளில் ஜனாஸா அடக்கிய பிறகு சிலர் மார்க்க சொற்பொழிவு செய்கிறார்களே, அதுபற்றி?
இந்த கேள்வியை ஷைக் முஹம்மத் இப்ன் ஸாலிஹ் அல் உதைமீனிடம் கேட்டோம், அதற்கு அவர் அது ஒரு பித்அத் எனக்கூறினார். எந்த அழைப்பாளரும் தான் நபி(ஸல்) அவர்களை விட அதிகமாக பிரச்சாரம் செய்வதற்கு விருப்பம் எனக்கூற முடியாது. நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா அடக்கிய பிறகு கப்ருகளில் நின்று கொண்டு பயான் செய்தார்கள் என ஆதாரம் ஏதும் இல்லை.
இது தொடர்பாக வரும் செய்தி பின்வருமாறு:
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பிரேத நல்லடக்கம் (ஜனாஸா) ஒன்றில் கலந்துகொள்வதற்காக "பகீஉல் ஃகர்கத்" பொது மையவாடியில் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அப்போது அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலைத் தரையில் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த கவலையிலும் யோசனையிலும்) இருக்கலானார்கள்.
பிறகு, "உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா, அல்லது நரகத்திலா என்று அல்லாஹ்வால் எழுதப்படாமல் இருப்பதில்லை; அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறு பெற்றதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை" என்று சொன்னார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டுவிட்டு) இருந்துவிடமாட்டோமா" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (விதியில்) நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறு பெற்றவர்களின் செயலுக்கு மாறுவார். யார் (விதியில்) நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறற்றவர்களின் செயலுக்கு மாறுவார்" என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள், "நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது. நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்" என்று கூறினார்கள்.
பிறகு "யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்" (92:5-10) எனும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். [ஸஹீஹுல் புகாரி 1362, ஸஹீஹ் முஸ்லிம் 5150 & 5151]
இதன் அடிப்படையில் எவர் ஒருவர் மய்யத் அடக்கம் செய்த பிறகு கபரின் அருகில் நின்றுகொண்டு பயான் செய்வாராயின் அவர் தவறுதலக இஜ்திஹாத் செய்கிறார்
கேள்வி: ஆனால் நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை செய்துள்ளர்களே?
அவர்கள் குத்பா உரை நிகழ்த்த வில்லை. அவர்கள் தன்னுடன் அமர்ந்திருந்தவர்களிடம் தற்செயலாக பேசினார்களே தவிர, உரை நிகழ்த்த வேண்டும் என்ற நிய்யத்தில் அவர்கள் பேச வில்லை. அதுவும் ஒருமுறை மட்டுமே செய்துள்ளார்கள். எல்லா மைய்யத்துக்களுக்கும் அவ்வாறு செய்யவில்லை
நபி(ஸல்) அவர்கள், ஸஹாபாக்களுக்கு கப்ருகளின் அருகில் அமர்ந்து “யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்" (92:5-10) எனும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். [ஸஹீஹுல் புகாரி 1362, ஸஹீஹ் முஸ்லிம் 5150 &5151]
وقال الشافعي رحمه الله: ويستحب أن يقرأ عنده شيء من القرآن، وإن ختموا القرآن عنده كان حسناً
"மண்ணறை அருகே குர் ஆன் ஓதப்படுவது விரும்பத்தக்கது. அந்த இடத்தில் குர் ஆன் முழுமையாக ஓதி முடிப்பது அழகாக உள்ளது" என இமாம் ஷாஃபியீ(ரஹ்) கூருகிறார்கள். [ரியாளுஸ் ஸாலிஹின்:947]
யாராவது குர்ஆணை ஓதினாலோ அல்லது சூரா யாஸீனை ஓதினாலோ, அது நபிவழி அன்று. ஏனென்றால் அது நபி(ஸல்) அவர்கள் எதேர்ச்சியாகாவே ஓதிக்காட்டினார்களே தவிர ஓத வேண்டும் என்ற நிய்யத்தில் அல்ல.
இரு கப்ருகளைக் கடந்து நபி(ஸல்) அவர்கள் சென்றபோது ஈரமான ஒரு மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றாக நட்டார்கள் 'இவ்விரண்டின் ஈரம் காய்ந்த வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்' எனக் கூறினார்கள். [ஸஹீஹுல் புகாரி 1378, ஸஹீஹ் முஸ்லிம் 491]. இதன் அடிப்படையில் கப்ருகளில் எல்லாம் செடி கொடிகளை நடுவதும் பித்அத் ஆகும்.
அடக்கம் செய்தபிறகு செய்யவேண்டியது, கப்ரின் அருகாமையிலேயே நின்று இறந்தவருக்காக பிரார்த்திக்க வேண்டும்.
அடக்கம் செய்யப்படும்வரை யார் கலந்துகொள்கிறாரோ அவருக்கு இரண்டு "கீராத்"கள் (பெரிய மலை அளவு) நன்மை உண்டு" [ஸஹீஹ் முஸ்லிம்:1723]
இறந்தவரை அடக்கம் செய்த பின்னர், நபி(ஸல்) அவர்கள் கப்ரின் அருகே நிற்பார்கள். அப்போது அவர்கள், "உங்கள் சகோதருக்காக பாவ மன்னிப்புக் கோருங்கள். இப்போது அவர் கேள்வி கேட்கப்படுகிறார்" என்று கூறினார்கள் என உஸ்மான் (ரலி) அறிவிக்கிறார்கள் [அபூதாவூத்:3221, ஹாகிம், புலூகுல் மராம் :605, ரியாளுஸ் ஸாலிஹின்:946]
அன்றி, அவர்களில் எவர் இறந்துவிட்டாலும் அவர்கள் மீது ஒருபோதும் (ஜனாஸா) தொழுகையும் தொழாதீர்கள். அவர்களுடைய கப்ரில் (அவர்களுக்காக மன்னிப்புக்கோரி) நிற்காதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்துவிட்டதுடன் பாவிகளாகவே இறந்தும் இருக்கின்றனர். [ஸூரத்துத் தவ்பா 9:84]
இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது, "நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது. என்னை (குழிக்குக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்க)ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன்". [ஸஹீஹ் முஸ்லிம்:192]
https://islamqa.info/en/answers/4020/preaching-to-people-in-the-graveyard-after-the-burial
https://islamqa.info/en/answers/36513/reading-quraan-at-the-grave
https://islamqa.info/en/answers/48958/it-is-not-prescribed-to-put-palm-leaf-stalks-or-flowers-on-graves
கப்ருகளில் ஜனாஸா அடக்கிய பிறகு சிலர் மார்க்க சொற்பொழிவு செய்கிறார்களே, அதுபற்றி?
இந்த கேள்வியை ஷைக் முஹம்மத் இப்ன் ஸாலிஹ் அல் உதைமீனிடம் கேட்டோம், அதற்கு அவர் அது ஒரு பித்அத் எனக்கூறினார். எந்த அழைப்பாளரும் தான் நபி(ஸல்) அவர்களை விட அதிகமாக பிரச்சாரம் செய்வதற்கு விருப்பம் எனக்கூற முடியாது. நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா அடக்கிய பிறகு கப்ருகளில் நின்று கொண்டு பயான் செய்தார்கள் என ஆதாரம் ஏதும் இல்லை.
இது தொடர்பாக வரும் செய்தி பின்வருமாறு:
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பிரேத நல்லடக்கம் (ஜனாஸா) ஒன்றில் கலந்துகொள்வதற்காக "பகீஉல் ஃகர்கத்" பொது மையவாடியில் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அப்போது அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலைத் தரையில் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த கவலையிலும் யோசனையிலும்) இருக்கலானார்கள்.
பிறகு, "உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா, அல்லது நரகத்திலா என்று அல்லாஹ்வால் எழுதப்படாமல் இருப்பதில்லை; அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறு பெற்றதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை" என்று சொன்னார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டுவிட்டு) இருந்துவிடமாட்டோமா" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (விதியில்) நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறு பெற்றவர்களின் செயலுக்கு மாறுவார். யார் (விதியில்) நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறற்றவர்களின் செயலுக்கு மாறுவார்" என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள், "நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது. நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்" என்று கூறினார்கள்.
பிறகு "யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்" (92:5-10) எனும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். [ஸஹீஹுல் புகாரி 1362, ஸஹீஹ் முஸ்லிம் 5150 & 5151]
இதன் அடிப்படையில் எவர் ஒருவர் மய்யத் அடக்கம் செய்த பிறகு கபரின் அருகில் நின்றுகொண்டு பயான் செய்வாராயின் அவர் தவறுதலக இஜ்திஹாத் செய்கிறார்
கேள்வி: ஆனால் நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை செய்துள்ளர்களே?
அவர்கள் குத்பா உரை நிகழ்த்த வில்லை. அவர்கள் தன்னுடன் அமர்ந்திருந்தவர்களிடம் தற்செயலாக பேசினார்களே தவிர, உரை நிகழ்த்த வேண்டும் என்ற நிய்யத்தில் அவர்கள் பேச வில்லை. அதுவும் ஒருமுறை மட்டுமே செய்துள்ளார்கள். எல்லா மைய்யத்துக்களுக்கும் அவ்வாறு செய்யவில்லை
நபி(ஸல்) அவர்கள், ஸஹாபாக்களுக்கு கப்ருகளின் அருகில் அமர்ந்து “யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்" (92:5-10) எனும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். [ஸஹீஹுல் புகாரி 1362, ஸஹீஹ் முஸ்லிம் 5150 &5151]
وقال الشافعي رحمه الله: ويستحب أن يقرأ عنده شيء من القرآن، وإن ختموا القرآن عنده كان حسناً
"மண்ணறை அருகே குர் ஆன் ஓதப்படுவது விரும்பத்தக்கது. அந்த இடத்தில் குர் ஆன் முழுமையாக ஓதி முடிப்பது அழகாக உள்ளது" என இமாம் ஷாஃபியீ(ரஹ்) கூருகிறார்கள். [ரியாளுஸ் ஸாலிஹின்:947]
யாராவது குர்ஆணை ஓதினாலோ அல்லது சூரா யாஸீனை ஓதினாலோ, அது நபிவழி அன்று. ஏனென்றால் அது நபி(ஸல்) அவர்கள் எதேர்ச்சியாகாவே ஓதிக்காட்டினார்களே தவிர ஓத வேண்டும் என்ற நிய்யத்தில் அல்ல.
இரு கப்ருகளைக் கடந்து நபி(ஸல்) அவர்கள் சென்றபோது ஈரமான ஒரு மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றாக நட்டார்கள் 'இவ்விரண்டின் ஈரம் காய்ந்த வரை இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்' எனக் கூறினார்கள். [ஸஹீஹுல் புகாரி 1378, ஸஹீஹ் முஸ்லிம் 491]. இதன் அடிப்படையில் கப்ருகளில் எல்லாம் செடி கொடிகளை நடுவதும் பித்அத் ஆகும்.
அடக்கம் செய்தபிறகு செய்யவேண்டியது, கப்ரின் அருகாமையிலேயே நின்று இறந்தவருக்காக பிரார்த்திக்க வேண்டும்.
அடக்கம் செய்யப்படும்வரை யார் கலந்துகொள்கிறாரோ அவருக்கு இரண்டு "கீராத்"கள் (பெரிய மலை அளவு) நன்மை உண்டு" [ஸஹீஹ் முஸ்லிம்:1723]
இறந்தவரை அடக்கம் செய்த பின்னர், நபி(ஸல்) அவர்கள் கப்ரின் அருகே நிற்பார்கள். அப்போது அவர்கள், "உங்கள் சகோதருக்காக பாவ மன்னிப்புக் கோருங்கள். இப்போது அவர் கேள்வி கேட்கப்படுகிறார்" என்று கூறினார்கள் என உஸ்மான் (ரலி) அறிவிக்கிறார்கள் [அபூதாவூத்:3221, ஹாகிம், புலூகுல் மராம் :605, ரியாளுஸ் ஸாலிஹின்:946]
அன்றி, அவர்களில் எவர் இறந்துவிட்டாலும் அவர்கள் மீது ஒருபோதும் (ஜனாஸா) தொழுகையும் தொழாதீர்கள். அவர்களுடைய கப்ரில் (அவர்களுக்காக மன்னிப்புக்கோரி) நிற்காதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்துவிட்டதுடன் பாவிகளாகவே இறந்தும் இருக்கின்றனர். [ஸூரத்துத் தவ்பா 9:84]
https://islamqa.info/en/answers/4020/preaching-to-people-in-the-graveyard-after-the-burial
https://islamqa.info/en/answers/36513/reading-quraan-at-the-grave
https://islamqa.info/en/answers/48958/it-is-not-prescribed-to-put-palm-leaf-stalks-or-flowers-on-graves
No comments:
Post a Comment