بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
"உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர், உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்" என்று எங்கோ ஒளித்தது நாகூர் ஹனிபாவின் பாடல். அப்பொழுது தான் கீழ்கண்ட நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ் எனது ஞாபகத்திற்கு வந்தது:
அந்த நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) பூரிப்படைந்திருக்கும். தம் இறைவனை (கூர்ந்து) பார்த்துக்கொண்டிருக்கும்,, 75:22-23 என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கையில்
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பௌர்ணமி இரவில் எங்களிடம் புறப்பட்டு வந்து, "நீங்கள் இந்த முழு நிலாவை நெருக்கடியின்றி காண்பதைப் போன்றே உங்கள் இறைவனை மறுமை நாளில் காண்பீர்கள்" என்று சொன்னார்கள். [ஸஹீஹுல் புகாரி:7436]
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்கவாசிகள் சொர்கத்தில் நுழைந்துவிடும் போது(அவர்களிடம்) அல்லாஹ் "இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா"? என்று கேட்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக ஆக்கவில்லயா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்கத்திற்குள் பிரேவிசிக்கச் செய்யவில்லயா. (இதைவிட கூடுதாலாக எங்களுக்கு வேறன்ன வேண்டும்)"? என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் (தன்னை சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு) தரிசனம் தந்திடுவான். அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கபட்டிராது (ஸஹீஹ் முஸ்லிம்:297).
அதன் பிறகு நன்மை புரிந்தோருக்கு நன்மையும் (அதைவிட) அதிகம் கிடைக்கும் எனும் இந்த (10:26)ஆவது வசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம்:298).
இறைவனுக்கு உருவம் இல்லை என்றால், அவர்கள் (சொர்கவாசிகள்) யாரை காண்பார்கள்?
மேலும் (நபியே!) அல்லாஹ்வை அவனுடய கண்ணியத்திற்கு தக்கவாறு அவர்கள் மதிப்பளிக்கவில்லை; இன்னும் பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனுடய (ஒரு கை) பிடியிலும், வானங்கள் (அனைத்தும்) அவனுடய வலக்கையிலும் சுருட்டப்பட்டவையாயிருக்கும்; அவன் தூயவன்; இன்னும் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன் ( 39:67)
இந்த வசனத்திற்க்கு விளக்கமளிக்கும் இமாம் முஹம்மத் அப்துல் வஹ்ஹாப் (ரஹி) தனது புத்தகமான கிதாபுத் தவ்ஹீதில் இவ்வாறு கூறுகிறார்கள்:
1. அல்லாஹ்வையன்றி மற்றவற்றை வணங்குபவர்கள், அல்லாஹ்வை அவனுடய கண்ணியத்திற்க்கு தக்கவாறு மதிப்பளிக்கவில்லை;
2. அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதும், அல்லாஹ்வை அவனுடய கண்ணியத்திற்க்கு பொருந்தாதவற்றை சாற்றாதிருப்பது (attributing) நம் கடமையாகும்.
3. அவன் கண்ணியத்திற்க்கு தக்கவாறு அவனுக்கு கைகள் உள்ளன.
இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் இமாம் இப்னு கஸீர் (ரஹி) கீழ்கண்ட ஹதீஸை மேற்கோள் காட்டுகிறார்கள்:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூத மத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மதே* அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன் என்று சொல்வான் என நாங்கள் (எங்களது வேத நூலான தவ்ராத்தில் கண்டோம் என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்கவேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப்பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன் உயர்ந்தவன் எனும் (39-67 ஆவது) வசனத்தை ஓதினார்கள். [ ஸஹீஹுல் புகாரி: 4811,7414 7415, 7451, 7513, ஸஹீஹ் முஸ்லிம்: 5371,5372,5373,5374]
இந்த ஹதீஸிலிருந்து அறியவருவதாவது, அல்லாஹ்விற்கு விரல்கள் இருக்கின்றெதெனவும், அவை நம் விரல்கள் போல் இல்லை என்றும், யூதப்புத்தகத்திற்க்கும், இஸ்லாத்திற்க்கும் சில ஒப்பந்தங்கள் உள்ளன எனவும் இமாம் முஹம்மத் அப்துல் வஹ்ஹாப் (ரஹி) கூறுகிறார்கள்.
"இப்லிஸே! என் இருகரங்களால் நான் படைத்ததற்கு நீ சிரம்பணியாது உன்னைத் தடுத்தது எது"? [38:75]
(அல்லாஹ்வாகிய) அவனுடய இருகைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன [5:64]
கண்ணியமும், சங்கையுமுடைய உமது இரட்சகனின் (சங்கையான) முக(ம் மட்டு)மே (அழியாது) நிலைத்திருக்கும். [55:27]
அவன் முகம் தவிர ஒவ்வொரு பொருளும் அழிந்துவிடக்கூடியதே [28:88]
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(நரகவாசிகள் நரகத்தில் போடப்படுவார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால்) இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்டுக்கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தமது பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது போதும்* போதும்* உன் கண்ணியத்தின் மீதாணையாக* என்று கூறும் நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [ ஸஹீஹுல் புகாரி: 6661, 7384]
நீங்கள் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக உங்கள் மீது என் அன்பை பொழிந்தேன் [20:39]
அது நம் கண்களுக்கு முன்பாகவே (பெரு வெள்ளத்தில் மிதந்து) சென்றது [54:14]
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) ஒற்றைக் கண்ணன் ஆவான் உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன்". [ ஸஹீஹுல் புகாரி: 7408, 7131, ஸஹீஹ் முஸ்லிம்:5620]
கெண்டைக்காலை விட்டு ( திரை) அகற்றப்படும் நாளில், அவர்களோ (அந்நாளின் போது) சிரம்பணிவதின் பால் அழைக்கபடுவர்; ஆனால் அவர்கள் (சிரம்பணிய) சக்தி பெறமாட்டார்கள் [68:42]
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதை தவிர்க்கட்டும். ஏனெனில், அல்லாஹ் ஆதமை தனது உருவத்திலேயே படைத்தான். [ஸஹீஹ் முஸ்லிம்: 5093]. [இந்த ஹதீஸின் விளக்கத்தை ஸஹீஹ் முஸ்லிமின் அடிக்குறிப்பில் காண்க.]
فإن الإمام أحمد يقول: من نفى الصورة فهو جهمي
يقول :" إن الله خلق آدم على صورته, والحديث في وعلى ذلك أهل العلم والنبي
الصحيح.
மேற்கூறபட்ட ஹதீஸின் அடிப்படையில் இமாம் அஹமது பின் ஹன்பல் (ரஹ்) கூறுவதாக ஷைக் யஹ்யா அல் ஹஜூரி (ஹாபிழ்) அவர்கள் "எவர் ஒருவர் அல்லாஹ்விற்கு உருவம் இல்லை என்று கூறுகிறார்களோ, அவர்கள் ஜஹமிய்யா ஆவார்கள்" என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் பண்புகளை பற்றி அஹ்லுல் ஸுன்னா வல் ஜமாவின் கொள்கைகள்:
1. அல்லாஹ் பற்றிய பெயர்கள், பண்புகளை குர்ஆன், சுன்னாவின் குறிப்பிடப்பட்டது போன்று நேரடியான பொருளில் விளங்க வேண்டும்
2. அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்கிறவன் (42:11)
3. அல்லாஹ்வின் பண்புகளை பொருள் மாற்றாமலும், மறுக்காமலும் (தஃதீல்), உதாரணம் கூறாமலும் (தஷ்பிஹ்) , இப்படித்தான் இருக்குமென்று சொல்லாமலும், படைபினங்களோடு ஒப்பிடாமலும் (தம்தீல்), மற்றும் சுயவிளக்கம் அளிக்கமலும் (தஃவீல்) நேரடியான பொருளில் நம்ப வேண்டும்.
ஜஹமியாக்கள், முஃதஸியாக்கள், அஷாயிராக்கள், மாதூர்தியாக்கள் போன்ற வழிதவறியவர்கள் தான் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தும், மாற்று பொறுள் கொடுத்தும் நம்பினார்கள்.
அல்லாஹ்வின் பண்புகளை இஸ்லாம் மார்கத்தில் உள்ளபடி நேரடியான பொருளில் நம்புவது அவசியமாகும். அதில் சுயவிளக்கத்தை மாற்று பொருள் கொடுப்பது வழிகேடாகும்
அல்லாஹ் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்க்குரியவாறும் அர்ஷின்மீது இருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ, அவ்வாறே) அவன் அர்ஷின்மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான் (7:54)
இதில் இஸ்தவா உயருதல் என்ற சொல்லுக்கான பொருள் என்ன? என்று இமாம் மாலிக் (ரஹி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்க்கு இமாம் மாலிக் (ரஹி) பின்வருமாறு விடை பகர்ந்தார்கள்:
"இஸ்தவா"வுக்கான பொருள் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் அதன் விதம் அறியப்படவில்லை. அதுபற்றி ஈமான் கொள்வது கடமை. அதைபற்றி விசாரிப்பது பித் அத் ஆகும்."
தஃப்ஸிர் இப்ன் கஸீரில் இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் ஆசிரியர் நுஐம் பின் ஹம்மாத் அல்குஸா(ரஹ்) கூறுவதாக கூறுவதாவது "யார் அல்லாஹ்வை, அவனுடய படைப்பினங்களில் ஒன்றுடன் ஒப்பிடுகின்றாரோ, அவர் இறைமறுப்பாளராகிவிடுவார்". அல்லாஹ் தனெக்கென குறிப்பிட்டுள்ள பண்புகளில் ஒன்றை மறுப்பவரும் இறைமறுப்பாளராகிவிடுவார். அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ அல்லாஹ்வுக்கென குறிப்பிடபட்டுள்ள பண்புகளில் படைப்புகளுக்கு ஒப்பானது எதுவும் கிடையாது.
எனவே, அல்லாஹ்வின் கண்ணியத்திற்கு ஏற்றவாறு தெளிவான இறைவசனங்களும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும், அல்லாஹ்வின் பண்புகளென கூறியவற்றை ஒப்புக்கொண்டு, குறைகளைவிட்டு அல்லாஹ் நீங்கியவன் என்று யார் கூறுகிறாறோ, அவர்தான் நல்வழி நடந்தவர் ஆவார்.
அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக! ஆமீன் ஆமின் யாரப்பால் ஆலமீன்.
-----அபுஅஸ்ரா
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
"உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர், உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்" என்று எங்கோ ஒளித்தது நாகூர் ஹனிபாவின் பாடல். அப்பொழுது தான் கீழ்கண்ட நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ் எனது ஞாபகத்திற்கு வந்தது:
அந்த நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) பூரிப்படைந்திருக்கும். தம் இறைவனை (கூர்ந்து) பார்த்துக்கொண்டிருக்கும்,, 75:22-23 என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கையில்
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பௌர்ணமி இரவில் எங்களிடம் புறப்பட்டு வந்து, "நீங்கள் இந்த முழு நிலாவை நெருக்கடியின்றி காண்பதைப் போன்றே உங்கள் இறைவனை மறுமை நாளில் காண்பீர்கள்" என்று சொன்னார்கள். [ஸஹீஹுல் புகாரி:7436]
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்கவாசிகள் சொர்கத்தில் நுழைந்துவிடும் போது(அவர்களிடம்) அல்லாஹ் "இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா"? என்று கேட்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக ஆக்கவில்லயா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்கத்திற்குள் பிரேவிசிக்கச் செய்யவில்லயா. (இதைவிட கூடுதாலாக எங்களுக்கு வேறன்ன வேண்டும்)"? என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் (தன்னை சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு) தரிசனம் தந்திடுவான். அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கபட்டிராது (ஸஹீஹ் முஸ்லிம்:297).
அதன் பிறகு நன்மை புரிந்தோருக்கு நன்மையும் (அதைவிட) அதிகம் கிடைக்கும் எனும் இந்த (10:26)ஆவது வசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம்:298).
இறைவனுக்கு உருவம் இல்லை என்றால், அவர்கள் (சொர்கவாசிகள்) யாரை காண்பார்கள்?
மேலும் (நபியே!) அல்லாஹ்வை அவனுடய கண்ணியத்திற்கு தக்கவாறு அவர்கள் மதிப்பளிக்கவில்லை; இன்னும் பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனுடய (ஒரு கை) பிடியிலும், வானங்கள் (அனைத்தும்) அவனுடய வலக்கையிலும் சுருட்டப்பட்டவையாயிருக்கும்; அவன் தூயவன்; இன்னும் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன் ( 39:67)
இந்த வசனத்திற்க்கு விளக்கமளிக்கும் இமாம் முஹம்மத் அப்துல் வஹ்ஹாப் (ரஹி) தனது புத்தகமான கிதாபுத் தவ்ஹீதில் இவ்வாறு கூறுகிறார்கள்:
1. அல்லாஹ்வையன்றி மற்றவற்றை வணங்குபவர்கள், அல்லாஹ்வை அவனுடய கண்ணியத்திற்க்கு தக்கவாறு மதிப்பளிக்கவில்லை;
2. அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதும், அல்லாஹ்வை அவனுடய கண்ணியத்திற்க்கு பொருந்தாதவற்றை சாற்றாதிருப்பது (attributing) நம் கடமையாகும்.
3. அவன் கண்ணியத்திற்க்கு தக்கவாறு அவனுக்கு கைகள் உள்ளன.
இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் இமாம் இப்னு கஸீர் (ரஹி) கீழ்கண்ட ஹதீஸை மேற்கோள் காட்டுகிறார்கள்:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூத மத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மதே* அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன் என்று சொல்வான் என நாங்கள் (எங்களது வேத நூலான தவ்ராத்தில் கண்டோம் என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்கவேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப்பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன் உயர்ந்தவன் எனும் (39-67 ஆவது) வசனத்தை ஓதினார்கள். [ ஸஹீஹுல் புகாரி: 4811,7414 7415, 7451, 7513, ஸஹீஹ் முஸ்லிம்: 5371,5372,5373,5374]
இந்த ஹதீஸிலிருந்து அறியவருவதாவது, அல்லாஹ்விற்கு விரல்கள் இருக்கின்றெதெனவும், அவை நம் விரல்கள் போல் இல்லை என்றும், யூதப்புத்தகத்திற்க்கும், இஸ்லாத்திற்க்கும் சில ஒப்பந்தங்கள் உள்ளன எனவும் இமாம் முஹம்மத் அப்துல் வஹ்ஹாப் (ரஹி) கூறுகிறார்கள்.
"இப்லிஸே! என் இருகரங்களால் நான் படைத்ததற்கு நீ சிரம்பணியாது உன்னைத் தடுத்தது எது"? [38:75]
(அல்லாஹ்வாகிய) அவனுடய இருகைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன [5:64]
கண்ணியமும், சங்கையுமுடைய உமது இரட்சகனின் (சங்கையான) முக(ம் மட்டு)மே (அழியாது) நிலைத்திருக்கும். [55:27]
அவன் முகம் தவிர ஒவ்வொரு பொருளும் அழிந்துவிடக்கூடியதே [28:88]
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(நரகவாசிகள் நரகத்தில் போடப்படுவார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால்) இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்டுக்கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தமது பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது போதும்* போதும்* உன் கண்ணியத்தின் மீதாணையாக* என்று கூறும் நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [ ஸஹீஹுல் புகாரி: 6661, 7384]
நீங்கள் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக உங்கள் மீது என் அன்பை பொழிந்தேன் [20:39]
அது நம் கண்களுக்கு முன்பாகவே (பெரு வெள்ளத்தில் மிதந்து) சென்றது [54:14]
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) ஒற்றைக் கண்ணன் ஆவான் உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன்". [ ஸஹீஹுல் புகாரி: 7408, 7131, ஸஹீஹ் முஸ்லிம்:5620]
கெண்டைக்காலை விட்டு ( திரை) அகற்றப்படும் நாளில், அவர்களோ (அந்நாளின் போது) சிரம்பணிவதின் பால் அழைக்கபடுவர்; ஆனால் அவர்கள் (சிரம்பணிய) சக்தி பெறமாட்டார்கள் [68:42]
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதை தவிர்க்கட்டும். ஏனெனில், அல்லாஹ் ஆதமை தனது உருவத்திலேயே படைத்தான். [ஸஹீஹ் முஸ்லிம்: 5093]. [இந்த ஹதீஸின் விளக்கத்தை ஸஹீஹ் முஸ்லிமின் அடிக்குறிப்பில் காண்க.]
فإن الإمام أحمد يقول: من نفى الصورة فهو جهمي
يقول :" إن الله خلق آدم على صورته, والحديث في وعلى ذلك أهل العلم والنبي
الصحيح.
மேற்கூறபட்ட ஹதீஸின் அடிப்படையில் இமாம் அஹமது பின் ஹன்பல் (ரஹ்) கூறுவதாக ஷைக் யஹ்யா அல் ஹஜூரி (ஹாபிழ்) அவர்கள் "எவர் ஒருவர் அல்லாஹ்விற்கு உருவம் இல்லை என்று கூறுகிறார்களோ, அவர்கள் ஜஹமிய்யா ஆவார்கள்" என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் பண்புகளை பற்றி அஹ்லுல் ஸுன்னா வல் ஜமாவின் கொள்கைகள்:
1. அல்லாஹ் பற்றிய பெயர்கள், பண்புகளை குர்ஆன், சுன்னாவின் குறிப்பிடப்பட்டது போன்று நேரடியான பொருளில் விளங்க வேண்டும்
2. அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்கிறவன் (42:11)
3. அல்லாஹ்வின் பண்புகளை பொருள் மாற்றாமலும், மறுக்காமலும் (தஃதீல்), உதாரணம் கூறாமலும் (தஷ்பிஹ்) , இப்படித்தான் இருக்குமென்று சொல்லாமலும், படைபினங்களோடு ஒப்பிடாமலும் (தம்தீல்), மற்றும் சுயவிளக்கம் அளிக்கமலும் (தஃவீல்) நேரடியான பொருளில் நம்ப வேண்டும்.
ஜஹமியாக்கள், முஃதஸியாக்கள், அஷாயிராக்கள், மாதூர்தியாக்கள் போன்ற வழிதவறியவர்கள் தான் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தும், மாற்று பொறுள் கொடுத்தும் நம்பினார்கள்.
அல்லாஹ்வின் பண்புகளை இஸ்லாம் மார்கத்தில் உள்ளபடி நேரடியான பொருளில் நம்புவது அவசியமாகும். அதில் சுயவிளக்கத்தை மாற்று பொருள் கொடுப்பது வழிகேடாகும்
அல்லாஹ் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்க்குரியவாறும் அர்ஷின்மீது இருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ, அவ்வாறே) அவன் அர்ஷின்மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான் (7:54)
இதில் இஸ்தவா உயருதல் என்ற சொல்லுக்கான பொருள் என்ன? என்று இமாம் மாலிக் (ரஹி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்க்கு இமாம் மாலிக் (ரஹி) பின்வருமாறு விடை பகர்ந்தார்கள்:
"இஸ்தவா"வுக்கான பொருள் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் அதன் விதம் அறியப்படவில்லை. அதுபற்றி ஈமான் கொள்வது கடமை. அதைபற்றி விசாரிப்பது பித் அத் ஆகும்."
தஃப்ஸிர் இப்ன் கஸீரில் இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் ஆசிரியர் நுஐம் பின் ஹம்மாத் அல்குஸா(ரஹ்) கூறுவதாக கூறுவதாவது "யார் அல்லாஹ்வை, அவனுடய படைப்பினங்களில் ஒன்றுடன் ஒப்பிடுகின்றாரோ, அவர் இறைமறுப்பாளராகிவிடுவார்". அல்லாஹ் தனெக்கென குறிப்பிட்டுள்ள பண்புகளில் ஒன்றை மறுப்பவரும் இறைமறுப்பாளராகிவிடுவார். அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ அல்லாஹ்வுக்கென குறிப்பிடபட்டுள்ள பண்புகளில் படைப்புகளுக்கு ஒப்பானது எதுவும் கிடையாது.
எனவே, அல்லாஹ்வின் கண்ணியத்திற்கு ஏற்றவாறு தெளிவான இறைவசனங்களும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும், அல்லாஹ்வின் பண்புகளென கூறியவற்றை ஒப்புக்கொண்டு, குறைகளைவிட்டு அல்லாஹ் நீங்கியவன் என்று யார் கூறுகிறாறோ, அவர்தான் நல்வழி நடந்தவர் ஆவார்.
அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக! ஆமீன் ஆமின் யாரப்பால் ஆலமீன்.
-----அபுஅஸ்ரா
No comments:
Post a Comment