Friday, December 18, 2020

A few consequences of sinning/disobeying Allāh

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ 

Imaam Ibn al-Qayyim رحمه الله listed a few consequences of sinning/disobeying Allāh:

• Lack of success

• Corrupt views

• Blindness from truth

• Corruption of the heart

• Failing to remember Allāh

• Wasting of time

• Avoidance and hate by the creation

• Separation between the servant and his Lord

• Supplication not being answered

• Hardness of the heart

• Decaying of blessing in provision and age

• Prevention from attaining knowledge

• Humiliation

• Insults from the enemies

• Constriction of the chest

• Affliction with evil friendship, those who corrupt the heart and make one waste the time

• Prolonging of sadness and grief

• Miserable life

• Disappointment

All this results from sinning and and neglecting to remember Allāh, just as crops are grown by being watered and are consumed by fire.

● 

● [كتاب الفوائد للإمام ابن القيم صفحة ٦٢]


Islamic Evidences of Climate Change

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ 

 Climate Change

1. Landslides , Earth Collapsing

It was narrated from ‘Abdullah that the Prophet (ﷺ) said:

“Just before the Hour comes there will be transformations, the earth collapsing, and Qadhf. (i.e. the throwing of stones perhaps as a means of punishment – maybe it refers to landslides).” Sunan Ibn Majah 4059 Sahih (Darussalam) https://sunnah.com/ibnmajah/36/134


2. Heavy Rain but no plantation

Narrated Abu Huraira(Ra) that the Messenger of ALLAH(sallahu alaihiwasallam) said:

“The Hour will not come until rain descends on people so heavily that no mud-brick houses would offer any protection against it and only houses made of camel hair would offer protection against it.” [Ahmad Shaakir and Shu‘ayb Al-Arnaa’oot: Saheeh (authentic)] Al-Albaani classified it as authentic in Silsilat Al-Ahaadeeth As-Saheehah, no. 7/79


Prophet (sallahu alaihiwasallam) said: Famine is not which there is no rain; rather famine is that in which there is rain but the earth does not produce anything. [ Ahmad, Al-Haythami said Its men are the men of Saheeh]


3. Euphrates will dry

Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) said, "Soon the river "Euphrates" will disclose the treasure (the mountain) of gold, so whoever will be present at that time should not take anything of it." Al-A'raj narrated from Abii Huraira that the Prophet (ﷺ) said the same but he said, "It (Euphrates) will uncover a mountain of gold (under it).Sahih al-Bukhari 7119

4. Arab goes back to Meadows and Rivers
Abu Hurayrah, may Allaah be pleased with him, narrated that the Prophet, sallallaahu ‘alayhi wa sallam, said: “‘The Hour will not come until the land of the Arabs goes back to being meadows and rivers; and until one travels from Iraq to Makkah fearing none but the highwaymen; and until Al-Harj becomes widespread.’ It was said, ‘What is Al-Harj, O Messenger of Allaah?’ He said: ‘Murder.’” [Ahmad]
Also in Malik Muwatta https://sunnah.com/urn/403300


Thursday, August 20, 2020

திக்ர் என்பது மணதிற்கு மட்டுமில்லை, உடலுக்கும் சிறந்தது

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ 

ஸஹீஹ் முஸ்லிம் - 5273 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து முறையிட்டார். அப்போது போர்க் கைதிக(ளான அடிமைக)ள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். ஆகவே, (தம் பணிகளில் தமக்கு உதவ அடிமையொருவரைக் கேட்பதற்காக) நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணமுடியவில்லை. (எனவே,) ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து, (தாம் வந்த நோக்கத்தை)த் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்த விவரத்தைத் தெரிவிக்கவே, நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.

அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்படியே இருங்கள்" என்று கூறிவிட்டு, எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். எனது நெஞ்சின் மீது அவர்களது பாதம் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணர்ந்தேன் (அந்த அளவுக்கு அவர்கள் எங்களிடையே நெருக்கமாக அமர்ந்தார்கள்).

பிறகு அவர்கள், "நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, முப்பத்து நான்கு முறை "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "அல்ஹம்து லில்லாஹ்" (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும் சொல்லுங்கள். அது உங்கள் இருவருக்கும் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள்.



இந்த ஹதிஸிலிருந்து நாம் கற்கும் பாடம்:

1. திக்ர் செய்வதின் சிறப்பை இந்த ஹதீஸ் உணர்துகிறது. திக்ர் என்பது மணதிற்கு மட்டுமில்லை, உடலுக்கும் சிறந்தது என அறியமுடிகிறது.

2. படுக்கைக்குச் செல்லும்போது, சுப்ஹானல்லாஹ் - 33, அல்ஹம்து லில்லாஹ் - 33 , அல்லாஹு அக்பர் - 34 தடவைகள் கூற வேண்டும். இதை நபி(ஸல்) அவர்கள் கூறிய நாளிலிருந்து அதை நான் ஓதாமல் விட்டதில்லை எனவும், ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூட ஓதாமல் இருந்ததில்லை எனவும் அலி(ரலி) அவர்கள் கூறியதாக மேலே கூறப்பட்ட ஹதீஸில் கூடுதல் தகவலாக, அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

3. பிள்ளைகளின் மீது அக்கறை உள்ள ஈமானிய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் இம்மை நலனைவிட மறுமைக்கு தேவையானதை கொடுப்பதிலும், மறுமை நலனின் மீதும் அக்கறை செலுத்துவார்கள். 

4. பெண்கள் வீட்டு வேலைகள் செய்வது ஊர் வழக்கமாக இருந்தால் அவ்வாறு செய்யட்டும். இதை இமாம் தபரி கூறுகிறார்கள்.

5. உடல் சோர்வு, மணச்சோர்வு குறித்து முறையிடுவது எந்த தவறும் இல்லை. ஏன் நபி மூஸா(அலை) அவர்களே தன் பணியாளரிடம், "இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்" என்று கூறினார்கள் [ஸூரத்துல் கஹ்ஃபு 18:62]

6. ஃபாத்திமா(ரலி), ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து, (தாம் வந்த நோக்கத்தை)த் தெரிவித்தார்.இதன் மூலம் ஃபாத்திமா(ரலி) ஆயிஷா (ரலி) வின் மீது இருந்த தோழமை, நம்ம்பிக்கை ஆகியவற்றை உண்ர முடிகிறது. அதைப்போல நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்த விவரத்தைத் தெரிவித்தார்கள். 

7. விவரத்தைத் அறிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ஃபாத்திமா(ரலி) அவர்களின் வீட்டிற்கு விறைந்ததும், அவர்கள் மகளின் மீது வைத்திருந்த பாசத்தை அறிய முடிகிறது. 

8. நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கும், ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கும் நடுவில் படுக்கையில் அமர்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பாதம், அலி(ரலி) அவர்களின் நெஞ்சின் மீது பட்டது. இதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் தன் மருமகண் மீது உள்ள நெருக்கத்தை அறியலாம். 

9. பெற்றோர் வயோதிகம் எட்டியதால், பிள்ளைகள் தான் பெற்றோரை காணச் செல்லவேண்டும் என்பதில்லை. முக்கியமான விடயம் என்றால், பெற்றோரும் பிள்ளைகளை காணச் செல்லலாம். 

10. வீட்டு வேலைகளின் சுமைகளை குறைக்க மணைவி வீட்டு வேலையாட்களை கேட்பது அவர் உரிமையாகும். 



Wednesday, July 22, 2020

ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பானிப் பிராணி போதும் (ஹஜ்ஜில் இருப்பவர்களைத்தவிர)

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ 


ஒரு குடும்பத்திற்கு ஒன்று போதும் (ஹஜ்ஜில் இருப்பவர்களைத்தவிர)
குர்பானி கொடுப்பது என்பது இன்று பெருமைக்காக செய்யப்படும் செயலாகி விட்டது. வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஆடு வீதம் கணக்கிட்டு தற்பெருமை நிமித்தம் குர்பானி கொடுக்கப்படும் பழக்கம் இருந்து வருகின்றது. இது தேவையற்றதாகும். ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடே போதும். இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களுடைய குர்பானி கொடுக்கும் பழக்கம் எப்படி இருந்தது? என்று அபூஅய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பார். அதை அவர்களும் உண்பார்கள். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். இந்நிலை இன்று மக்கள் பெருமைக்காக செய்யும் வரை இருந்தது. தற்போது நாம் காணும் நிலை ஏற்பட்டு விட்டது(அதாவது ஒரு குடும்பத்தினரே பல ஆடுகளை குர்பானி கொடுக்கும்நிலை ஏற்பட்டது) என்று பதில் கூறினார்கள். அறிவிப்பாளர்: அதாஉ இப்னு யஸார்(ரலி),[திர்மிதி:1505, இப்னுமாஜா:3147, முஅத்தா அல்-மாலிக்].
“நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஒரு ஆட்டையோ, இரண்டு ஆட்டையோ குர்பானி கொடுத்தனர் என்ற சுன்னத்தை நான் அறிந்த பிறகு (நான் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பதால்) என்னை என் குடும்பத்தினர் கல்நெஞ்சன் என்று கருதுகின்றனர். (நான் பல ஆடுகளை கொடுக்காததால்)என் அண்டை வீட்டார் என்னை கஞ்சன் என்கின்றனர்” அறிவிப்பாளர்: அபூ ஸரீஹா(ரலி) [இப்னுமாஜா: 3148]


குர்பானிப் பிராணி தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்
(ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், 'இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப்பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது' என்று கூறினார்கள்.
உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்து விட்டிருந்த) அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, '(இறைத்தூதர் அவர்களே!) என்னிடம் ஒரு வயதுடைய (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது' என்று கூறினார்கள்.3
'(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழி முறையைப் பின்பற்றியவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
இதையும் பராஉ(ரலி) அவர்களே அறிவித்தார்கள் [ஸஹீஹுல் புகாரி: 5545,5560]

மிக்னஃப் இப்ன் ஸுலைம்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நாங்கள் நபி(ﷺ) அவர்களுடன் அரஃபாத்த்தில் நின்று கொண்டு இருந்தோம். அப்பொழுது அவர்கள், "ஓ மனிதர்களே! நிச்சயமாக் உங்களில் ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு ஆன்டும், உழ்ஹிய்யா மற்றும் அதீரா கொடுக்க வேண்டும்" என்று கூறினார்கள். [இப்ன் மாஜா: 3125]



The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...