بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
முஆத் நின் அனஸ் அல் ஜூஹனி(ரலி) அவர்கள் கூறியதாவது:
இமாம் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது முதுகையும் முட்டுக் கால்களையும் சேர்த்துக் கட்டிக்கொண்டு அமர்வதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள். (திர்மிதி:472) இமாம் திர்மிதி இதை ஹஸன் எனக் கூறுகிறார்கள்)
மேலும் இமாம் திர்மிதி (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள், "வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரை நிகழ்த்தும்போது முதுகையும் முழங்கால்களையும் கட்டிக்க்கொண்டு அமர்வதை அறிஞர்களில் ஒரு சாரார் வெற்க்கத் தக்கதாக கருதுகின்றனர். வேறு சிலர் அதை அனுமதிக்கின்றனர். அப்துல்லாஹ் இப்ன் உமர்(ரலி) அவர்கள் உள்ளிட்ட சிலர் இவர்களில் அடங்குவர்.
அஹ்மத் பின் ஹன்பல்(ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி(ரஹ்) ஆகியோர் இவ்வாறே கூறுகின்றனர். இமாம் உரை உரையாற்றிக்கொண்டிருக்கும் போது இவ்வாறு அமருவதை குற்றமாக கருதவில்லை"
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، وَعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، حَدَّثَنِي أَبُو مَرْحُومٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْحَبْوَةِ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ . وَأَبُو مَرْحُومٍ اسْمُهُ عَبْدُ الرَّحِيمِ بْنُ مَيْمُونٍ . وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ الْعِلْمِ الْحَبْوَةَ يَوْمَ الْجُمُعَةِ وَالإِمَامُ يَخْطُبُ وَرَخَّصَ فِي ذَلِكَ بَعْضُهُمْ مِنْهُمْ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَغَيْرُهُ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ لاَ يَرَيَانِ بِالْحَبْوَةِ وَالإِمَامُ يَخْطُبُ بَأْسًا .
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளரான அபூமர்ஹீம் என்பவரின் இயர்பெயர் அப்துர் ரஹீம் பின் மைமூன் என்பதாகும். அவரும், அவரிக்கு ஹதீஸ் அறிவித்த சஹ்ல் பின் முஆத் என்பவரும் நபிமொழி அறிவிப்பில் பலஹீனமான அறிவிப்பாளர்கள் என யஹ்யா பின் மயீன் (ரஹி) அவர்கல் குறிப்பிடுகிறார்கள்.
சஹ்ல் பின் முஆத் அவர்களின் ஹதீஸ்கள் வினோதாமனவை என இப்ன் ஹிப்பான் கூறுகிறார்கள். இவரின் ஹதீஸ்களை எழுதுகொள்ளலாம் ஆனால் ஆதாரமாக கொள்ள இயலாது என அபு ஹாதிம் கூறுகிறார்கள்.
நாங்கள் பைத்துல் முகத்தஸில் மூஆவியா(ரலி) அவர்களுடன் அமர்திருந்தோம், அப்பொழுது மிகுதியானவர்கள் நபி தோழர்களாக இருந்தனர், அவர்கள் ஜும்மா உரையுன் போது முட்டிகால்கலை கட்டிக்கொண்டு உட்கார்திர்ந்தனர். அதில் இப்ன் உமர்(ரல்) மற்றும் அனஸ்(ரலி) அவர்களும் அடங்குவர். அவர்களுடன் கருத்கு வேறுபாடி கொண்டிருந்தவர்களை நாம் யாரையும் அரியமாட்டோம், என்று யலா இப்ன் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
உட்காருவதில் இடது கையை பின்னால் ஊன்றி உட்காருவது தவறாகும்: https://abuazraa.blogspot.com/2017/01/blog-post.html
மேலிம் விவரங்களுக்கு:
https://islamqa.info/en/answers/129182/ruling-on-sitting-with-the-knees-drawn-up-ihtiba
No comments:
Post a Comment