Sunday, April 2, 2023

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் முன் உரக்க பேசிய ஸஹாபி

  بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி)  என்ற ஸஹாபி இயற்கையிலேயே குரலை நபி(ஸல்) முன்னிலையில் உயர்திப் பேசுபவர்.  அவர்கள் அன்சாரிகளின் பேச்சாளராக இருந்தார்கள்.

அல்லாஹுத் தஆலா 49:2 வசணத்தை இறக்கினான்.

விசுவாசிகளே! நபியினுடைய சப்தத்திற்கு மேல் உங்களுடைய சப்தத்தை உயர்த்தாதீர்கள், மேலும், உங்களில் சிலர் மற்ற சிலருடன் உரக்கப் பேசுவதைப் போல், அவரிடம் பேசுவதில் (சப்தத்தை உயர்த்தி) நீங்கள் உரக்கப் பேசாதீர்கள், (ஏனெனில், இதனை) நீங்கள் உணர்ந்துக்கொள்ள முடியாத நிலையில் உங்களுடைய (நன்மையான) செயல்கள் அழிந்துவிடும். (49:2)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(49:2ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர், ‘‘அவரைக் குறித்த செய்தியைத் தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார்.

அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில் அமர்ந்துகொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், ‘‘உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.

அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘(எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்குமேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி)வந்தேன். என் (நற்)செயல்கள் அழிந்துவிட்டன; நான் நரகவாசிகளில் ஒருவன்தான்” என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார்” என்று தெரிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று ‘நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்!” என்று கூறினார்கள்
(ஸஹீஹுல் புகாரி: 4846, 3613,ஸஹீஹ் முஸ்லிம்: 187)


Saturday, April 1, 2023

தேவையில்லாமல் உரக்க பேசாதீர்

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

உன் சப்தத்தையும் தாழ்த்திகொள்வாயாக! (ஏனென்றால்) நிச்சயமாக சப்தங்களிலெல்லாம் மிக வெறுக்கத்தக்கது, கழுதைகளின் சப்தமே” என்று (லுஃக்மான் தம் புதல்வரிடம்) கூறினார். (21:19)

தேவையில்லாமல் குரலை உயர்த்துபவரின் உச்ச நிலை என்னெவென்றால், அவர் கழுதைக்கு ஒப்பாகிவிடுவார். அதுதான் அப்படி கத்தும். அத்தோடு உயர்ந்தோன் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர் ஆளாகிவிடுவார். 

இங்கு கழுதைக்கு ஒப்பிட்டு அல்லாஹ் கூறியிருப்பதானது, இச்செயல் தடை செய்யப்பட்டதாகும் (ஹராம்) என்பதையும் மிகமிக இழிவானதாகும் என்பதையும் உணர்த்துகிறது. 

நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: (இது போன்ற) கெட்ட உதாரணம் நமக்கு உரியதன்று. (ஸஹீஹுல் புகாரி: 2622)

இந்த வசனத்தின் விளக்கவுரையில் இமாம் நஸயீ(ரஹ்) அவர்கள் தமது 'சுனனுல் குப்ராவில் பின்வரும் ஹதீஸை இடம்பெறச்செய்துள்ளார்கள். 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சப்தத் தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கிறன. (அதனால்தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சப்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (அதனால் தான் கத்துகிறது.)" (ஸஹீஹுல் புகாரி: 3303)


நபி(ஸல்) அவர்களால் இடிக்க கட்டளையிடப்பட்ட பள்ளிவாசல்

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

நயவஞ்சகர்கள் கூபா பள்ளிவாசலுக்கு அருகே போட்டிப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டினார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் தபூக் போருக்கு செல்வதற்கு முன்பே கட்டி முடித்துவிட்டனர் பின்னர் அந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, "(அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் கட்டியிருக்கும் பள்ளிவாசலில் தாங்கள் தொழ வேண்டும். அவ்வாறு தொழுவதன் மூலம் உங்கள் ஒப்புதலுக்கும் அங்கீகாரத்திற்கும் அதையே நாங்கள் சான்றாகக்கொள்வோம்" என்றனர்.  நபி(ஸல்) அவர்கள், "போர் பயணத்த்தில் இருந்த்தால், தற்போது பணத்தில் உள்ளோம், எனினும் நாங்கள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பும்போது அல்லாஹ் நாடினால், பார்கலாம்" என பதிலுறைத்தார்கள். 

நபி(ஸல்) அவர்கள் தபூகிலிருந்த்து திரும்பிவந்துகொண்டிருந்தார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து நயவஞ்சகர்கள்  கட்டிய அந்த தொல்லை தரும் பள்ளிவாசல்(மஸ்ஜிதுல் ளிரார்) தொடர்பான செய்தியை எடுத்துரைத்தார்கள். அந்த பள்ளிவாசலை நிறுவியவர்கள், இறைமறுப்பை வளர்க்க வேண்டும் என்றும், தொடக்க நாள் முதல் இறையச்சத்தின் மீது நிறுவபட்ட பள்ளிவாசலாகிய குபா பள்ளிவாசலில் இறைநம்மிக்கையாளர்கிடையே பிரிவினை ஏற்படுத்த வேண்டும் என்றும் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.  

என்வே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தாம் மதீனா வருவதற்கு முன்னரே அந்தப் பள்ளிவாசலை தரைமட்டமாக்குவதற்காக ஆட்களை அனுப்பினார்கள். 

(முஸ்லிம்களுக்குத்) தீங்கிழைப்பதற்காகவும் (அல்லாஹ்வை) நிராகரிப்பதற்காகவும் விசுவாசிகளுக்கிடையில் பிரிவினையை உண்டு பண்ணுவதற்காகவும் முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் விரோதமாய் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாயிருப்பதற்காகவும் ஒரு பள்ளியைக் கட்டியிருக்கின்றார்களே அத்தகையோர்-(அந்நயவஞ்சகர்களில் இருக்கின்றனர்.) மேலும், “நிச்சயமாக நாங்கள் நன்மையைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று திண்ணமாக சத்தியமும் செய்கின்றனர், இன்னும், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.  (நபியே!) நீர் ஒருபோதும் அதில் (தொழுவதற்காக) நிற்க வேண்டாம், ஆரம்ப நாளிலிருந்தே (அல்லாஹ்வின்) பயபக்தியின் மீது அஸ்திவாரமிடப்பட்ட பள்ளியானது, அதில்தான், நீர் (தொழுகைக்காக) நிற்பது மிகத் தகுதியுடையது, பரிசுத்தமாக இருப்பதையே விரும்பும் சிறந்த மனிதர்கள் அதில் இருக்கின்றனர், அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தமாக இருப்போரை நேசிக்கின்றான். (9:107-108)

குறிப்பு:
இனை துணையற்ற ஏகனாகிய அல்லாஹ்வை வழிபாடு செய்வதற்கென்றே நிறுவபட்ட தொன்மையன பள்ளிவாசலில் தொழுவது விரும்பத் தக்கது என்பதற்குச் இந்த ஆயத்து சான்றாக அமைந்துள்ளது. 

அவ்வாறே அசுத்தங்கள் படாமல் காத்துக்கொள்வதிலும், அங்கத் தூய்மையை (உளூ) நிறைவாக செய்வதிலும், கண்ணும் கருத்துமாக இருக்கின்ற நல்லறங்கள் புரிகின்ற நல்லடியார்களோடு இணைந்து (கூட்டாக) தொழுவது  விரும்பத் தக்கது என்பதற்குச் இந்த ஆயத்து சான்றாக அமைந்துள்ளது.


குளிக்கும் முறை

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ குளிக்கும் முறை: 1.நிய்யத் (குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்) 2. முன் கைக...