بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
::: தேவதாரு (Red Cedar) மரம் பற்றி சிறு குறிப்பு ::::
தேவதாரு = தேவன் +தாரு . தாரு என்றால் மரம். தேவனால் நடப்பட்ட மரம் என்கிறது விவிலியம்
தேவதாரு ” மரங்கள் கடல் மட்டத்திலிருந்து 3500 அடிக்கு அதிகமாக அமைந்திருக்கும் மலை சிகரங்களில் வளர்பவை. லெபனான், துருக்கி, ஸைப்பரஸ் தீவு ஆகிய பகுதிகளில் காணப்படும்
"ஆண்டவரின் மரங்களுக்கு — லெபனோனில் அவர் நட்ட தேவதாரு மரங்களுக்கு — நிறைய நீர் கிடைக்கின்றது - சங்கீதம் 104:16
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, (இளம்) பயிர் போன்றதாகும். காற்று அதைச் சாய்த்துக்கொண்டேயிருக்கும். (அவ்வாறே) இறைநம்பிக்கையாளருக்குச் சோதனைகள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும்.
நயவஞ்சகனின் நிலை, (விறைப்பாக நிற்கும்) தேவதாரு மரத்தைப் போன்றதாகும். (பலமாக வீசும்) காற்று அதை வேரோடு சாய்த்துவிடுகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புஹாரி : 5644, முஸ்லிம்:5410)
No comments:
Post a Comment