தொழும்போது கைவிரல்களை ஒன்றோடு ஒன்று கோத்தல் விரும்பத் தக்கதல்ல என்பது தொடர் பாக வந்துள்ளவை
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ رَجُلٍ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الْمَسْجِدِ فَلاَ يُشَبِّكَنَّ بَيْنَ أَصَابِعِهِ فَإِنَّهُ فِي صَلاَةٍ "
. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ كَعْبِ بْنِ عُجْرَةَ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنِ ابْنِ عَجْلاَنَ مِثْلَ حَدِيثِ اللَّيْثِ . وَرَوَى شَرِيكٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا الْحَدِيثِ وَحَدِيثُ شَرِيكٍ غَيْرُ مَحْفُوظٍ .
திர்மிதி 352 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதை அழகிய முறையில் செய்து பின்பு பள்ளிவாசலை நோக்கிச் சென்றால் அவர் கையிர களை ஒன்றோடு ஒன்றைக் கோந்து வேஏனெனில் அவர் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுவார்.
இதை கஅப் பின் உஜிராவி அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஆபூஈஸா திமிதீ கூறுகிறேன்:
உகப் பின் உஜ்ரா ரலி அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை, முஹம்மத் பின் அஜ்லான் ரஹ்) அவர்கள் வழியாக லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதைப் போன்றே வேறுபலரும் அறிவித்துள்ளனர். இந்த ஹதீஸை அபூஹுரைரா ரலி அவர்கள் வாயிலாக ஷரீக்(ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள். ஆனால் ஷரீக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பு பாதுகாக்கத் தகாத ஹதீஸ் ஆகும். (அதாவது 'ஷாத்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்)
_______________________________________________________________________________
அதாவது ஷரீக் பின் அப்தில்லாஹ் அவர்கள் நபிமொழி அறிவிப்பில் அதிகமாகத் தவறிழைப்பவராகவும், நினைவாற்றல் குறைந்தவராகவும் இருந்தார். எனவே, இவர் அறிவிக்கும் அபூஹுரைரா ரலி அவர்களின் ஹதீஸ் நம்பி ஏற்கப்படும் நிலையில் இல்லை.
கஅப் பின் உஜரா அறிவிக்கும் ஹதீஸ் (அபுதாவுத்:562) அவ்வாறு இல்லை என்றாலும், அதிலும் ஊர் பெயர் தெரியாத ஒருவர் அறிவிப்பாளராக வருகிறார் என்பது கவனிக்கத் தக்கதாகும். (துஹ்ஃபத்துல் அஹ்வதி)
Abu Thmama al-Qmah https://sunnah.com/narrator/138
Also see :
https://islamqa.info/en/answers/36801/it-is-makroh-to-interlace-one-s-fingers-when-going-out-to-pray-until-one-has-prayed
https://sunnah.com/tirmidhi:386
https://sunnah.com/abudawud:562