தொழும்போது கைவிரல்களை ஒன்றோடு ஒன்று கோத்தல் விரும்பத் தக்கதல்ல என்பது தொடர் பாக வந்துள்ளவை
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ رَجُلٍ، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الْمَسْجِدِ فَلاَ يُشَبِّكَنَّ بَيْنَ أَصَابِعِهِ فَإِنَّهُ فِي صَلاَةٍ "
. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ كَعْبِ بْنِ عُجْرَةَ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنِ ابْنِ عَجْلاَنَ مِثْلَ حَدِيثِ اللَّيْثِ . وَرَوَى شَرِيكٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا الْحَدِيثِ وَحَدِيثُ شَرِيكٍ غَيْرُ مَحْفُوظٍ .
திர்மிதி 352 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதை அழகிய முறையில் செய்து பின்பு பள்ளிவாசலை நோக்கிச் சென்றால் அவர் கைவிரல்களை ஒன்றோடு ஒன்றைக் கோத்து நெட்டி முறிக்க வேண்டாம். ஏனெனில், அவர் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுவார்.
இதை கஅப் பின் உஜிரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஆபூஈஸா திமிதீ கூறுகிறேன்:
உகப் பின் உஜ்ரா ரலி அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை, முஹம்மத் பின் அஜ்லான் ரஹ்) அவர்கள் வழியாக லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதைப் போன்றே வேறுபலரும் அறிவித்துள்ளனர். இந்த ஹதீஸை அபூஹுரைரா ரலி அவர்கள் வாயிலாக ஷரீக்(ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள். ஆனால் ஷரீக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பு பாதுகாக்கத் தகாத ஹதீஸ் ஆகும். (அதாவது 'ஷாத்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்)
_______________________________________________________________________________
அதாவது ஷரீக் பின் அப்தில்லாஹ் அவர்கள் நபிமொழி அறிவிப்பில் அதிகமாகத் தவறிழைப்பவராகவும், நினைவாற்றல் குறைந்தவராகவும் இருந்தார். எனவே, இவர் அறிவிக்கும் அபூஹுரைரா ரலி அவர்களின் ஹதீஸ் நம்பி ஏற்கப்படும் நிலையில் இல்லை.
கஅப் பின் உஜரா அறிவிக்கும் ஹதீஸ் (அபுதாவுத்:562) அவ்வாறு இல்லை என்றாலும், அதிலும் ஊர் பெயர் தெரியாத ஒருவர் அறிவிப்பாளராக வருகிறார் என்பது கவனிக்கத் தக்கதாகும். (துஹ்ஃபத்துல் அஹ்வதி)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ عَمْرٍو، حَدَّثَهُمْ عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ، قَالَ حَدَّثَنِي سَعْدُ بْنُ إِسْحَاقَ، عَنْ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، حَدَّثَنِي أَبُو ثُمَامَةَ الْحَنَّاطُ، أَنَّ كَعْبَ بْنَ عُجْرَةَ، أَدْرَكَهُ وَهُوَ يُرِيدُ الْمَسْجِدَ أَدْرَكَ أَحَدُهُمَا صَاحِبَهُ قَالَ فَوَجَدَنِي وَأَنَا مُشَبِّكٌ بِيَدَىَّ فَنَهَانِي عَنْ ذَلِكَ وَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الْمَسْجِدِ فَلاَ يُشَبِّكَنَّ يَدَيْهِ فَإِنَّهُ فِي صَلاَةٍ "
Abu Thmama al-Qmah https://sunnah.com/narrator/138
(88)
பாடம் : 88 பள்ளிவாசல் முதலியவற்றில் இரு கைவிரல்களை (ஒன்றுடனொன்றை) கோத்துக் கொள்வது (குற்றமன்று).
478 - இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கை விரல்களையும் கோர்த்தார்கள்.
482 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக
எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பள்ளியில்
நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில்
சாய்ந்தார்கள். தங்களின் வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை
விரல்களைக் கோர்த்தார்கள். தம் வலது கன்னத்தை இடக்கையின் மீது வைத்தார்கள்.
Also see :
https://islamqa.info/en/answers/36801/it-is-makroh-to-interlace-one-s-fingers-when-going-out-to-pray-until-one-has-prayed
https://sunnah.com/tirmidhi:386
https://sunnah.com/abudawud:562
No comments:
Post a Comment